திருவனந்தபுரம்: கேரளாவில் ஆலப்புழா அருகே சகழி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அருகில் உள்ள அம்பலபுழா பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் நேற்று தலவடியில் உள்ள பனயன்னூர் காவு கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கனமழை பெய்ததால் கோயிலை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. கோயில் அருகே 4 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மணமக்களால் திருமணத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நிச்சயித்தபடி அந்த கோயிலில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று மணமக்கள் உறுதியாக இருந்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.