சண்டிகர்: எல்லை பாதுகாப்புப் படையின் அதிகார எல்லையை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளதை தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட விவகாரம் என்று இம்மாநில அமைச்சரவை கடும் கண்டனம் தெரிவித்தது. பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்குட்பட்ட சர்வதேச எல்லைகளில் 15 கி.மீ. தூர எல்லைக்குள் கைது, சோதனை, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எல்லை பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த 15 கி.மீ. தூரம் என்பதை 50 கி.மீ. தூரமாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் விரிவாக்கம் செய்தது. இதன் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அதிகாரம் இம்மூன்று மாநிலங்களிலும் அதிகமாகி உள்ளது. ஒன்றிய அரசின் இந்நடவடிக்கைக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.