கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜவின் இளைஞர் பிரிவு மாவட்ட செயலாளர் மிதுன் கோஷ் மர்மநபர்களால் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். மேற்கு வங்க மாநிலம், இதாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜ்கிராம் பகுதியை சேர்ந்தவர் மிதுன் கோஷ். இவர் பாஜ இளைஞர் பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் மிதுன் கோஷ் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மிதுனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவரது வீட்டில் இருந்தவர்கள் மிதுனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.