புதுடெல்லி: இந்தியாவில் இருந்து படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றவர் விஷால் ஜூத். இவர் சிட்னி நகரில் வசித்து வந்தார். கடந்தாண்டு சிட்னியில் உள்ள சீக்கியர்களை தாக்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இவர் சிட்னியில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களை மட்டுமே தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அவரை விடுதலை செய்யும்படி கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.