சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் கருங்கல் ஜல்லி, எம்.சாண்ட் குவாரிகள் இயங்காத காரணத்தால் கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமான கட்டுமான தொழில்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் 17 மருத்துவ கல்லூரிகள், 7 சட்ட கல்லூரிகள் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.