தடுப்பூசி எண்ணிக்கை 98 கோடி தாண்டியது

புதுடெல்லி: நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 98 கோடியை தாண்டியிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும் பின்னர் படிப்படியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று இரவு வரையிலான புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் 98.6 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: