போலி ஆவணம் தயாரித்து ரூ.10 லட்சம் வீட்டு மனை அபகரிப்பு: 3 பேர் கைது

சென்னை: போலி ஆவணம் தயாரித்து ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டு மனையை அபகரித்த 3 மோசடி ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் முத்துக்குமாரசாமி தெருவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 1992ம் ஆண்டு திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள பள்ளியரைகுப்பம் ஐசிஎம்ஆர் நகரில் 2400 சதுர அடி கொண்ட வீட்டு மனை வாங்கினார். இதனை அவர் முறையாக பத்திர பதிவு செய்தார். இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு செங்குன்றம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மோகனின் வீட்டு மனையை போலி ஆவணம் தயாரித்து, அந்த ஆவணத்தை உண்மையான ஆவணம்போல் காண்பித்து மோசடி செய்துள்ளார்.

அவருக்கு உடந்தையாக திருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை புதிய சாலையை சேர்ந்த வேலாயுதம், வேப்பம்பட்டு, புஜங்கண்டிகையை சேர்ந்த முனிரத்தினம் ஆகியோர் இருந்து வேறு ஒருவருக்கு விற்பணை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மோகன் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஹயாத்செரிப், குப்புசாமி, சிவசங்கரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மோகன்(50), வேலாயுதம்(49), முனிரத்தினம்(49) ஆகியோரை கைது செய்தனர்.  

Related Stories: