ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வயது வரம்பு நீட்டிப்பு 31-12-2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: