பாலக்காடு: கேரள-தமிழக எல்லை வாளையார் வனப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக வாளையார் வனத்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்தறை காவலர்கள் இணைந்து கடந்த 3 நாட்களாக வாளையார், வடசேரி, மலையடிவாரம் பகுதியில் கஞ்சா வேட்டையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு 2 ஏக்கர் நிலப்பரப்பில் மர்ம கும்பல் 13 ஆயிரம் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது தெரியவந்தது. மேலும் பல்வேறு இடங்களில் பயிரிடுவதற்கு கஞ்சா செடிநாற்றுகள் தயார்படுத்தியுள்ளனர்.