திருபுவனை: புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை பகுதியில் பல ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களின் கழிவுகளை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிலர் கொட்டிவிட்டு செல்கிறார்கள். சாலையோரத்தில் அவை தேங்கி கிடப்பதால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள் உணவுக்கழிவுகளை உண்பதற்காக சாலை ஓரங்களில் அதிக அளவில் கூடுகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.