சாலையோரம் குவியும் குப்பைகள்

திருபுவனை: புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில்  திருபுவனை  பகுதியில்  பல ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களின் கழிவுகளை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிலர் கொட்டிவிட்டு செல்கிறார்கள். சாலையோரத்தில் அவை தேங்கி கிடப்பதால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள் உணவுக்கழிவுகளை உண்பதற்காக  சாலை ஓரங்களில் அதிக அளவில் கூடுகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதேபோல் பன்றிகள் சாலை ஓரங்களில் மேய்வதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே ஓட்டல் நிர்வாகத்தினர் கழிவுகளை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு உரிய இடத்தில் கொட்ட வேண்டும் எனவும், அப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை உடனடியாக பிடித்து உரியவரிடம் ஒப்படைத்து எச்சரிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: