தொடர்மழையால் பாபநாசம் சேர்வலாறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனால் தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் விகேபுரம் அடுத்த மேல கொட்டாரத்தை சேர்ந்த அரசுப் போக்குவரத்து கழக முன்னாள் டிரைவரான சுப்பையா தேவர் (80) என்பவர், இயற்கை மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை அவருக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.