குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீமுஷ்ணம்:  ஸ்ரீமுஷ்ணம் கீழ்புளியங்குடியில் இருந்து வக்காரமாரி செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடக்கும் போது நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இதனால் அரசு சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.

கீழ்புளியங்குடியில் உள்ள கலுங்கில் வக்காரமாரி ஏரி தண்ணீர் வெளியேற கீழ்புளியங்குடி களுங்கில் உயர்மட்ட பாலம் அமைத்து மழை காலங்களில் அனைவரும் எளிதில் கடந்து செல்லும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: