சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி அருகே செங்கமலபட்டி முருகன் காலனியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. மின்மோட்டார் அடிக்கடி பழுது, குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் இருந்ததாலும் புதியதாக வேறொரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பழைய தண்ணீர் தொட்டியை பராமரிப்பு செய்யாமலும், இடித்து அப்புறப்படுத்தாமலும் அப்படியே விட்டுவிட்டனர்.