வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே பாலாறு அணைக்கட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பாலாற்றில் 6,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 3,500 கனஅடி தண்ணீர் கால்வாய் மூலமாக ஏரிகளுக்கு திறந்துவிடப்படுகிறது. மேலும், பாலாற்றில் இருந்து கால்வாய் வழியாக காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் கிராமம் பாலாறு மற்றும் நீவாநதி என்ற பொன்னையாறு ஆகிய 2 ஆறுகளும் சங்கமிக்கும் இடமாகும்.