விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் 10 விவசாயிகளுக்கு இழப்பீடு தந்து திட்டத்தை தொடங்கி வைத்தார். 2020-21-ல் சம்பா பயிர்காப்பீட்டு தொகையாக 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,597.18 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜெ.ஜெயலலிதா மின்வளப் பல்கலைக்கழகம் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: