ஜெனீவா : கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு அக் 26ம் தேதி கூடுகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்காக உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் வேண்டி தேவையான ஆவணங்களை அந்நிறுவனம் ஏற்கனவே அளித்துவிட்டது. கடந்த செப் 27ம் தேதி கோவாக்சின் தரப்பில் கூடுதல் தரவுகள் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்து வரும் உலக சுகாதார அமைப்பு, கோவாக்சினை அங்கீகரிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்காக ஏற்பாடு செய்த கூட்டத்தை 2 முறை தள்ளி வைத்து இருந்தது.