சென்னை: தென் மேற்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கேரளாவில் பெரும் மழை பெய்து வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை நீடித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகள் பெரும்பாலும் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், அங்கும் நீர் பிடிப்பு பகுதிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும் மழை நீடித்து வருகிறது.