×

அக்டோபர் 1ம் தேதி முதல் 16வது நாளாக உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை: முறையே 31, 33 காசு அதிகரிப்பு

சேலம்: பெட்ரோல், டீசல் விலை நடப்பு மாதத்தில் 16வது நாளாக நேற்று, முறையே 31, 33 காசுகள் அதிகரித்தது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் (அக்டோபர்) கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரையிலான 17 நாட்களில், 4ம் தேதி தவிர மற்ற 16 நாட்களும் விலையேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நாடு முழுவதும் பெட்ரோல் 31 காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் நேற்று முன்தினம், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70க்கு விற்கப்பட்ட நிலையில் 31 காசு உயர்ந்து ரூ.103.01க்கு விற்கப்பட்டது. டீசல் விலை ரூ.98.59ல் இருந்து 33 காசு உயர்ந்து ரூ.98.92க்கு விற்பனையானது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். 


Tags : October, petrol, diesel, increase
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...