தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த நவம்பட்டு அருகே உள்ள இருதயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ். இவரது மகன்கள் லியோ பெனிக்ஸ்(25). அலெக்ஸாண்டர்(23). இவர்களது உறவினர் மகன் ஜான் போஸ்கோ(35). இவர்கள் 3 பேரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரவிதமாக திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் வீட்டின் சுவர்கள் இடிந்து, மேற்கூரையும் சரிந்து விழுந்தது.