மும்பை: ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ராஜ் குந்த்ராவின் ஜே.எல் ஸ்ட்ரீம் நிறுவனத்துக்காக சில காட்சிகளில் நடித்தேன். இதற்காக அவர்கள் சொன்னபடி எனக்கு பணம் கொடுக்கவில்லை. ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது புகார் அளிக்க எனது சட்ட ஆலோசகர்கள் குழுவுடன் ஜூஹூ காவல் நிலையம் சென்றேன்.