செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் விடுத்துள்ள அறிக்கை: ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை. பாலாற்றில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது, இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பாலாற்றை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.