திருவொற்றியூர்: சாத்தாங்காடு பிரதான சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் மற்றும் விளம்பர பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 12வது வார்டுக்கு உட்பட்ட சாத்தாங்காடு பிரதான சாலையை ஆக்கிரமித்து கடைகளின் முகப்பு மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. எனவே, இவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.