சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,218 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,87,092. 1,411 பேர் குணமடைந்தனர். அதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,36,379 ஆக உள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று தனியார் மருத்துவமனையில் 6 பேரும், அரசு மருத்துவமனையில் 9 பேர் என 15 பேர் உயிரிழந்துள்ளனர்.