ஊட்டி: தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் 3 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த இரு மாதங்களாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். தற்போது ஆயுத பூஜை, வார விடுமுறை மற்றும் கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறை வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒன்றரை ஆண்டுக்கு பின் ஊட்டிக்கு கடந்த 3 நாட்களில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால், ஊட்டி நகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று வாகன நெரிசல் காணப்பட்டது.