சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ், இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: 45 நாய்கள் இறந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. ஐஐடி நிறுவனம் 617 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. 10,600 சதுர அடி பரப்பில் செட்டுகள் அமைத்து நாய்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வெறித்தனம் இல்லாத 14 நாய்கள் வெளியில் விடப்பட்டுள்ளது. ேமலும் ஓராண்டில் 56 நாய்கள் இறந்துள்ளது. வெளியில் இருந்து செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு விருப்பம் தெரிப்பவர்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலையும் கேட்டுள்ளோம். 2 நாய்கள் இங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது. தற்போது 87 நாய்கள் பராமரிப்பில் உள்ளது.