கலசபாக்கம்: துரிஞ்சாபுரம் அருகே வேணுகோபால சுவாமி கோயிலில் நேற்று குழந்தை வரம் வேண்டி பெண்கள் மடி சாதம் வாங்கி சாப்பிட்டனர். கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், நாயுடுமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 5ம் சனிக்கிழமைகளில் மடி சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்போது, மடி சாதம் வாங்கி சாப்பிடுபவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதன்படி, புரட்டாசி 5ம் சனிக்கிழமையான நேற்று மடிசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.