ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடல் சுமார் 50 மீ. அளவுக்கு உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வர மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.