துபாய்: 7வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடருடன் டி.20 கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார். இதனால் அவர் கோப்பையுடன் விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி: புவனேஸ்வர்குமார் பார்ம் பற்றி கவலை இல்லை. ஸ்டிரைக் ரேட்டில் அவர் இன்னும் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல்லில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 12 ரன் எடுக்க வேண்டிய நேரத்தில் டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தபோது நேர்த்தியாக பந்துவீசி தனது அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். களத்தில் அவரின் அனுபவம் உதவும். அவரது துல்லியம் எப்போதும் அணிக்கு விலைமதிப்பற்றது என்று நினைக்கிறேன். அஷ்வின் 4 வருடங்களுக்கு மேலாக வெள்ளை பந்து கிரிக்கெட் விளையாடவில்லை.