பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி டாஸ்மாக் கடை பகுதியில் யானை வழித்தடத்தில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கேரளா, தமிழகம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களின் எல்லைப்பகுதி என்பதால் யானைகள் தமிழக எல்லை பகுதியான கூடலூர், பந்தலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகம் மாநிலங்களுக்கு இடப்பெயர்ந்து செய்வது வழக்கம். சில பகுதிகளில் யானை வழித்தடங்களில் சோலார் மின்வேலிகள் அமைக்கப்படுவதால் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு இடப்பெயர்ந்து செய்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. அதனால் குடியிருப்புகளை நோக்கி காட்டு யானைகள் செல்கின்றது. அதன்மூலம் மனித-யானை மோதல்கள் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதனால் மாவட்ட நிர்வாகம் யானை வழித்தடங்களில் உள்ள சோலார் மின்வேலி, முள்வேலிகள், கம்பி வேலிகள் அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.