பத்தனம்திட்டா: கேரளாவில் பெய்து வரும் மிக பலத்த கனமழை காரணமாக சபரிமலை கோயிலுக்கு செல்ல 19ம் தேதி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
மேலும், ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டிருப்பதால், பிற பகுதிகளில் இருந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வரும் 19ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.