சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உதவிட வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வருக்கு பாஜ தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அனைத்து மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பாரம்பரியமான மிக பிரதான தொழிலில் பட்டாசு தயாரிப்பு தொழில் மிக முக்கியமானதாகும். தமிழகத்தில் மட்டும் இத்தொழிலை நம்பி 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வணிகர்கள் அது சார்ந்த தொழிலில் இருந்து வருகின்றனர்.