சேலம், அக்.17: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. இதனால், நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. இம் மாதத்தில் கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை (4ம் தேதி தவிர) 15 நாள் விலையேற்றப்பட்டுள்ளது. இந்த 15 நாளில் பெட்ரோல் ரூ.3.12ம், டீசல் ரூ.3.86ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் பெட்ரோல் 30 காசும், டீசல் 33 முதல் 35 காசு வரையும் உயர்த்தப்பட்டது.