மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக மணலை லாரியில் கொண்டு சென்ற வழக்கில் கடந்த செப்.29ல் கைதான பாலமுருகன், மருதுபாண்டியன், பிரேம்நாத், மூர்த்தி மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் ேகாரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஆனந்தி ஜாமீன் வழங்கி, பாலமுருகன் ரூ.20 ஆயிரமும், மற்றவர்கள் தலா ரூ.15 ஆயிரமும் மதுரை ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் திரும்ப பெறாத வகையில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், ராமநாதபுரத்தில் நடந்த மணல் திருட்டு வழக்கில் கைதான முகம்மது ரிஷ்வானுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி எஸ்.ஆனந்தி, மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.