கோவை: கோவை காரமடை கணுவாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா (40). இவர் காரமடை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கே திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.