துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.55 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த எமரேட்ஸ் ஏர்லைன்ஸ், சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர்அரேபியா ஆகிய விமானங்களில் வந்த சென்னை, ராமநாதபுரம், ஆந்திரா, திருச்சியை சேர்ந்த 4 ஆண்கள்,  ஒரு பெண் ஆகிய 5 பேர் உள்ளாடைக்குள் மறைத்து 2.55  கிலோ தங்கப்பசையை கடத்தி வந்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.16 கோடி.  அவர்களை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: