தமிழகத்தில் 1,233 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,233 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,30,251 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,233 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,85,874 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,434 பேர் குணமடைந்தனர். அதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,34,968 ஆக உள்ளது. கொரோனாவிற்கு 15 பேர்  உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,884 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அதிகபட்சமாக நேற்று சென்னையில் 160 பேர், கோவையில் 136 பேர், என 2 மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: