சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல். மேலும் தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல்(தற்செயல் தேர்தல்) நடத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தது. தொடர்ந்து கடந்த 6 மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.