சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் வட்டாரத்தில் கூறுகையில், ‘‘ நேற்று முதல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்படும் செய்தி குறிப்பில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சைலேந்திர பாபு என்று குறிப்பிட்டு வழங்குகிறோம்’’ என்று தெரிவித்தனர்.