இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடபுழாவில் பெய்த கனமழையால் ஒருவர் உயிரிழப்பு என மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் இதுவரை காணாமல் போனதாக மீட்புப்படையினர் தகவல் அளித்துள்ளனர். கேரளாவில் மீட்பு பணிகளுக்காக ராணுவம், விமானப்படை தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் மீட்புப்படை தெரிவித்திருக்கிறது.