ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கங்கை முதல் கடாரம் வரை படையெடுத்து வெற்றி கொண்டு ஆட்சி புரிந்த ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் உலகின் பெரும்பாலான நாடுகளை ஆட்சி புரிந்தார். அவரது நினைவாக வெற்றி கொண்ட நாடுகளில் இருந்து வெற்றியின் நினைவாக அங்கிருந்த அரிய பொக்கிஷங்களை எடுத்து வந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் கலாச்சாரம் பண்பாடு உடை நாகரீகம் அணிகலன்கள் ஆகியவைகளை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில். தனது தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற கோயிலை கட்டினார். 13 அரை அடி உயரமும் 60 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் ஒரே சிவலிங்கமான பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.