சென்னை: சாதனை வீரரான மாணவர் சர்வேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாரத்தானை நிறைவு செய்த பள்ளி மாணவர் சர்வேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். குமரி முதல் சென்னை வரையிலான மாரத்தானில் 750 கி.மீ. தூரத்தை 2 வாரங்களுக்குள் சர்வேஷ் கடந்து வந்தார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சர்வேஷ். கடந்த அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரையிலான 750 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தை சர்வேஷ் தொடங்கினார்.