ஆற்காடு: ஆற்காடு அருகே கிராம நத்தம் அரசு புறம்போக்கு இடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த கட்டிட பணிகளை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆற்காடு தாலுகா சாத்தூர் கிராமத்தில் நத்தம் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சண்முகம் என்பவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.