திருவாடானை: திருவாடனை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாகம்பிரியாள் கோயில் தங்கும் விடுதியை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து தங்கி செல்கின்றனர். இக்கோயிலை பொருத்தமட்டில் இரவு தங்கி சாமி கும்பிடுவது சிறப்பு என கருதப்படுவதால் பக்தர்கள் தங்குகின்றனர். இதற்காக இரண்டு திறந்தவெளி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பாக தங்க விரும்பும் பக்தர்களுக்கு எட்டு தங்கும் அறைகளும், 2 தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளன. இதில் 2 தங்கும் விடுதிகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.