கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் நாளை முதல் 21-ம் தேதி வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. இனையவழியில் முன்னதாகவே முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.