பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பெரியராமாபுரம் ஊராட்சி செட்டிவாரிப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ கங்கையம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு நேற்று மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை மஹா பூர்ணாஹுதி பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.