மாலே: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் இந்தியா - நேபாளம் அணிகள் இன்று மோதுகின்றன. மாலத்தீவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக டிரா செய்ததால் சற்று தடுமாறிய இந்திய அணி, பின்னர் சிறப்பாக விளையாடி நேபாளம், மாலத்தீவுகள் அணியை வீழ்த்தி பைனல் வாய்ப்பை உறுதி செய்தது. சாப் கோப்பை கால்பந்து தொடரில் 12வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியா, இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.