சென்னை: பரோட்டா சாப்பிட்டதால் கல்லூரி மாணவன் இறந்தானா அல்லது வேறு ஏதாவது ஒரு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கொளத்தூர், வி.வி.நகர், 5வது தெருவை சேர்ந்த அரியகுட்டி மகன் சிபி சங்கமித்ரன் (17). அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டு விட்டு, 10 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.