திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது. தற்போதும் தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரவி வருகிறது. இந்நிலையில், இந்த மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் யாராவது கொரோனா பாதித்து மரணம் அடைந்தால், குடும்பத்திற்கு 3 வருடங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க ேகரள அரசு தீர்மானித்துள்ளது.