கவர்னருடன் முருகன் சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று காலை கிண்டியில் உள்ள, அவரது கவர்னர் மாளிகையில் சந்தித்து ேபசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒன்றிய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன், ஒவ்வொரு மாநிலமாக சென்று கவர்னர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அதன் அடிப்படையில் தான் தமிழக கவர்னரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் தமிழக அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமை, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜ மூத்த தலைவர்கள் பொன்ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சக்ரவர்த்தி, சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கவர்னரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: