இடமாறுதல் செய்யப்பட்ட போலீசாரை ஒரு வாரத்தில் விடுவிக்க வேண்டும்: உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: பணியிடமாறுதல் செய்யப்பட்ட போலீசாரை, சம்பந்தப்பட்ட பிரிவு உயர் அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று அனைத்து பிரிவு உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து பிரிவு உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை இடமாறுதல்  வழங்கப்பட்டும், பணியாற்றும் இடத்தில் இருந்து விடுவிக்கப்படாமல் இருப்பது விரும்ப தகுந்தது அல்ல.

தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவை தவிர அனைத்து மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்படும் பணியிடமாறுதல் உட்பட எந்த உத்தரவுகளும் உடனடியாக அமல்படுத்தப்படுவது இல்லை. எனவே, இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒரு வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும். கவனக்குறைவாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: