சென்னை: பணியிடமாறுதல் செய்யப்பட்ட போலீசாரை, சம்பந்தப்பட்ட பிரிவு உயர் அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று அனைத்து பிரிவு உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து பிரிவு உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை இடமாறுதல் வழங்கப்பட்டும், பணியாற்றும் இடத்தில் இருந்து விடுவிக்கப்படாமல் இருப்பது விரும்ப தகுந்தது அல்ல.